ஆபத்து ஆபத்து அதிரை செக்கடிப்பள்ளிவாசல் சொத்திற்கு ஆபத்து!
அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில்(19வது வார்டு) செக்கடிப்பள்ளிவாசல் உள்ளது. அதன் முன்பக்கத்தில் "செக்கடி" என்ற குளமும் உள்ளது. இந்த செக்கடிக்குளம் செக்கடிப்பள்ளிவாசலுக்கு அனுபவச் சொந்தம்! இது, கடந்த 46 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதாகும்.
ஆனால், இன்று (17/03/13 ஞாயிறு) காலை செக்கடிக்குளம் தென்கரை பக்கம் அதிரை பேரூராட்சி அறிவிப்பு பலகை ஒன்றை தொங்கவிட்டுள்ளது.அந்த அறிவிப்பானது,
" முக்கிய அறிவிப்பு.
அதிராம்பட்டினம் பேரூராட்சி 21வது வார்டில் உள்ள செக்கடிக்குளம் அரசுக்கு சொந்தமானதாகும். மேற்படி இடத்தில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் மீறி நடப்பவர்கள் மீது நில ஆக்கிரமிப்பு சட்டத்தீன் கீழ் கைது செய்யப்படும். ஏற்கனவே கட்டி இருக்கக்கூடிய கட்டிடங்களை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
பேரூராட்சி நிர்வாகம் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி"
இது தான் அந்த அறிவிப்பாகும்.இதனால், அதிரையில் பெரும்அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. "19வது வார்டில் இருக்கும் இந்த செக்கடிக்குளத்தை 21வது வார்டில் இருப்பதாக அறிவிக்கின்ற அளவு "தெளிவாக" இருக்கும் பேரூராட்சி நிர்வாகம் , இந்த இடம் யாருக்கு என்பதை எப்படி "தெளிவாக" ஆய்வு செய்திருக்கும்" என்று கேட்கிறார்கள்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்