Breaking News
recent

அதிரையில் “மாட்டுக்கறி” வியாபாரத்திற்கு தடையா ? - அதிர்ச்சி ரிப்போர்ட் !


அதிரையில் அமைதியை குலைக்க பின்னப்பட்டிருக்கும் சதி அம்பலமாகியிருக்கிறது, அமைதியாக அனைத்து சமுதாயத்தவரும் சகோதர பாசத்தோடு இன-மத பேதமின்றி உறவாடி வரும் அதிரை மக்கள் மத்தியில் பாஸீச கும்பலொன்று தனது வேலையை அரங்கேற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அவர்கள் கையில் எடுத்திருக்கும் சர்ச்சை 'மாட்டுக் கறி', இதற்கு பேரூராட்சி மன்றம் தடைவிதித்து விட்டதாக பகிங்கமாக சுவரொட்டிகள் ஒட்டி ஊர் முழுவதும் பதற்றமான சூழலை பாஸீச விஷமிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களாக அமைதியான முறையில் தொழில் செய்துவரும் சகோதரர்களுக்கு இவ்வாறான தொந்தரவுகள் கொடுப்பதிலிருந்தும், ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தனித்து தகுந்த சட்ட ஆதாரங்களை முன்வைத்து அதற்கான ஆவண செய்வதை விடுத்து, ஏதோ தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை களம் இறக்கி அங்கே முஸ்லீம் விரோத கும்பலின் தலையீட்டால் கலகம் ஏற்படுத்தும் சதி அம்பலமாகியிருக்கிறது.


அன்பார்ந்த அதிரை சகோதரர்களே, முஸ்லீம்களின் ஒரு பொது அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் மார்கெட்டில், பாஸீச விரோதிகளின் ஆதிக்கம் நுழைய அனுமதிக்க வழிவகை செய்ய துணை போகாதீர்கள், வீணான பதற்றம் ஏற்படுத்தி சகோதரர்கள் மத்தியில் கலவர பீதியை ஏற்படுத்தும் கும்பலை சட்டபூர்மவாக தண்டிக்க முறையான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒன்றினையுங்கள்.

நம் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமைகாத்து சகோதரத்துவம் பேனுவோம் இன்ஷா அல்லாஹ்....


Unknown

Unknown

6 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ கொம்புசீவி விட்டுள்ளார்கள். நம் சமூகத்தில் உள்ளவர்களே நம் கழுத்துக்கு(ஷரியத்துக்கு)கத்திவைக்கும் மோடி(டு) (மாடு)முட்டித்தனம்.யார் நம் மார்பில் முட்ட பார்ப்பது? அரசியல் காழ்புணர்ச்சி இப்ப மாட்டு இறைச்சின் மூலம் இறையாண்மை??க்கே வெ(வே)ட்டுவைப்பது நியாயமா? இதை இப்பவே களைய நாம் ஒன்று திரளனும். இன்னும் மழையில் நனைந்த மாடு போல் சொரணையற்று இருந்தால் நாளை மருமை விசாரனையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிவரும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த போஸ்ட்டருக்கும் இந்து முன்னனிக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பே இல்லை பெரும்பாலும் இந்து முன்னனியில் பிரசுரங்கல் போட்டால் இவண் என்றுதான் போடுவார்கள் இதில் இங்ஙகனம் என்று உள்ளது

    மற்றோன்று இந்து முன்னனி காரர்கள் ஊருக்குள் அதாவது இஸ்லாமியர்கல் வசிக்கும் இடங்களில் வந்து இப்படி தைரியமாக போஸ்டர்கள் ஒட்ட மாட்டார்கள்.

    இதில் ஏதோ சம்த்திங் ராங்.... டேய் உங்க அரசியல் விளையாட்ட வேறு எங்காவது வச்சி கோங்க ...... பாவம் டா அப்பாவி அதிரை இளைஞர்கள் மறுபடியும் கோர்ட்டு கேசுன்னு அலைய விட்டுடாதீங்க ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  3. அவரவர்களுக்கு பிடித்த உணவை உண்பதற்கு ஒரு பேரூராட்சி மன்றம் தடைவிதிக்க எந்த முகாந்திரமோ, சட்ட அனுமதியோ இல்லை...

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. This is not issue. Before the shop owner put all garbage in graveyard. Adirai municipality inform the show owner don’t pass all garbage in graveyard. But the show owner informs and you can see the video he told before adirai chairman support him. The shop owner already in TMMK. But he is doing bad as per above message. Please clarify this matter two people are Muslim. I request to TMMK please take compromise to both muslim brothers.
    நட்பை வளர்த்தல்
    (1) ஸலாம் கூறுதல்
    عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ( لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ ) وفي رواية: ( وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا )
    என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவர்களாக முடியாது. உங்களிடையே நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்!
    (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 81)
    உறவினர்களாக இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறவேண்டும்.
    (2) அன்பைத் தெரிவித்தல்
    أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ مَرَّ رَجُلٌ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأُحِبُّ هَذَا الرَّجُلَ قَالَ هَلْ أَعْلَمْتَهُ ذَلِكَ قَالَ لَا فَقَالَ قُمْ فَأَعْلِمْهُ قَالَ فَقَامَ إِلَيْهِ فَقَالَ يَا هَذَا وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ فِي اللَّهِ قَالَ أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ
    நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார்.
    அறிவிப்பர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல் : அஹ்மது 11980

    பதிலளிநீக்கு
  6. மொத்தத்தில் ஹலாலாக முறையில் அறுத்து மக்கள் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் இவர் செய்கின்றாறேன்றால் இதுபோன்றோற்கு நாம் ஆதரவு காட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.